ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், சுமார் 30 லட்சம் சந்தாதாரர்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு அதிரடியாக நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அப்போது, காஷ்மீரில், தொலைத்தொடர்பு சேவைகள், இணைய சேவைகள் முடக்கப்பட்டு, முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
இவ்வாறான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் சந்தாதரர்களை, பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நிகழ் நிதியாண்டின், செப்டம்பர் மாதத்தோடு முடிந்த இரண்டாவது காலாண்டு அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.