சாம்சங் கேலக்ஸி M33 5G செல்போன் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாம்சங், தென் கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானின் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சாம்சங் செல்போன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனம் கேலக்ஸி M33 5G செல்போனுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது சாம்சங் கேலக்ஸி M33 5G செல்போன் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாடலை எதிர்ப்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சாம்சங் கேலக்ஸி M33 5G மாடலின் சிறப்பம்சங்கள் வருமாறு : இந்த செல்போன் 5nm octa-core processor உள்ளது. 6.6 இஞ்ச் (1,080×2,408 pixels) LCD தொடுதிரை கொண்ட இந்த மொபைலில், 120Hz refresh rate உள்ளது. 6,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதோடு, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 6GB ராம் மற்றும் 8GB ராம் என இரண்டு வகையில் வெளிவந்துள்ள இந்த மாடலில், 128GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 சாஃப்டுவர் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல், UI 4.1 நுன்பொருளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 5G, மற்றும் 4G LTE உள்ளிட்ட நெட்வோர்க் வசிதகள் உள்ளன.
செல்போனின் முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல் பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் 5 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் மற்றும் டெப்த் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மொபைல் புளூ, பளுப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் வெளியாகவுள்ளது.
இந்திய மதிப்பில் இந்த செல்போன் 20,000 ரூபாய்க்கு குறைவாகவே விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமேசானில் இந்த மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக சாம்சங் கேலக்ஸி M33 5G செல்போனுக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.