நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.82 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.49 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 37,379 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,60,261 ஆக உயர்ந்தது.
* புதிதாக 124 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,017ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,007 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,06,414 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,71,830 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 98.13% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.49% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் 1,46,70,18,464 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 99,27,797 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.