நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,63,530 ஆக உயர்ந்துள்ளது. (ந-13) இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இதையும் படியுங்கள்👇 .* புதிதாக 11,271 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307ஆக உயர்ந்தது.
* புதிதாக 285 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,63,530 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,376 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,37,859 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,35,918 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* நேற்று 57,43,840 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
* இந்தியாவில் இதுவரை 1,12,01,03,225 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
* கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.26%; உயிரிழப்பு விகிதம் 1.35% ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்👇 .